நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்து!

Monday, January 30th, 2023

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

அத்துடன் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட தொகை 457 மில்லியன் ரூபாயாகும். இத்திட்டத்தின் 99% பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன.

கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவது, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதும் பராமரிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோபா கு...
நேரத்தைக் கழிப்பதற்காகவே காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் - பொராட்டத்தில் தகுதியான காரணம் எதுவுமில்லை...
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுட...