உரமானியத்தை மாத்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது!
Monday, July 3rd, 2017
உரமானியத்தை மாத்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இங்கினிமிட்டிய நீர்ப்பாசனத் திட்டத்தின் இடதுபக்க அணையின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.
தற்போது சீர்குலைந்துள்ள நீர்ப்பாசனச் செயற்திட்டங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் விவசாயத்துறை விருத்தி காண வேண்டுமானால் நீர்ப்பாசனத்துறை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அங்கு மேலும் தெரிவித்தார்.
Related posts:
வறட்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இராணுவ உதவி - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
இவ்வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிக்கான சேவைகள் தொடரும் - புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!
அதிக பணிச்சுமை - தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!
|
|