2030 இல் இலங்கையின் வயோதிபர் சனத்தொகை 21 வீதமாக ஆக அதிகரிக்கும் – முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவிப்பு!

Sunday, February 5th, 2023

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வயோதிபர்களின் சனத்தொகை 21% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வயோதிபர் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையில் 14.6% என்ற அளவில் உள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதியோர்களுக்கான தேசிய சபையின், 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அந்த சபை வழங்கிய வயது வயோதிபர் அடையாள அட்டைகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 279 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: