30 உதவிச் சட்டவுரைஞர்கள் நியமிக்கப்படுவர் – நீதியமைச்சின் செயலாளர்!

Friday, October 6th, 2017

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உதவிச் சட்டவுரைஞர்கள்  30 பேரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளை, மிகவிரைவாக, நிறைவுக்குக் கொண்டுவரும் நோக்கி​லேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றங்களில், தற்போது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அந்த வழக்குகளை மிகவிரைவாக நிறைவுக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுதாகவும் அந்த வழக்குகளை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக, ஒவ்வொரு மேல் நீதிமன்றங்களுக்கும், சட்டவுரைஞர்கள் இருவரை நியமிப்பதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர், அவர்களை இணைத்துகொள்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: