தொடரும் வறட்சியான காலநிலை – மின்னுற்பத்தி குறையலாம் என ஆரூடம்!

மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த நாள்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும், தினசரி நீர் மின் உற்பத்திக்கு தற்போது எந்த தடையும் இல்லை என அவர்கள் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநக...
எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை - தனியார் பேருந்து சங்கம்!
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!
|
|