பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு – யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைது !

Friday, February 9th, 2024

யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒறில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்து ஒன்றில் பொதுமக்களுடன், பொதுமகன்கள் போன்று பிரயாணம் செய்த பொலிஸ் புலனாய்வாளர்களே இவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என்றும், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: