தொடர்ந்தும் மின்வெட்டு – நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
Thursday, March 10th, 2022இன்றைய தினமும்(10) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய பிரிவுகளில் இரண்டு கட்டங்களாக மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது!
இந்தியப் பிரதமரை தமது நாட்டுக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு !
வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
|
|