வடமராட்சி கடற்கரையில் கரை ஒதுங்கிய அழகிய மர்ம வீடு!
Wednesday, January 15th, 2025
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்ட நிலையில், அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து மர்ம வீடு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது இந்நிலையில் குறித்த வீட்டினை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
00
Related posts:
நாடாளுமன்ற மோதல் குறித்த அறிக்கையை 02 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது - அரசாங்கம் அறிவிப்பு!
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை ...
|
|
|


