கப்பல்களை பாதுகாக்க நெதர்லாந்துடன் ஒப்பந்தம்!

Friday, May 12th, 2017

நெதர்லாந்தின் தேசிய கொடியுடன் பயணிக்கும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது தொடர்பில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடத்தில் இருந்து நெதர்லாந்து தேசிய கொடியுடன் பயணிக்கும் வணிக கப்பல்களை பாதுகாப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் நெதர்லாந்து அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய நெதர்லாந்தின் தேசிய கொடியுடன் பயணிக்கும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது தொடர்பில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: