காலநிலையில் திடீர் மாற்றம்!

Sunday, February 24th, 2019

எதிர்வரும் சில சில தினங்களுக்கு நாட்டின் தென் பகுதியில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

விசேடமாக ஊவா மாகாணத்தில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் , ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அதேபோல் , காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களிலும் மற்றும் மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களிலும் காற்றின் வேகம் விட்டு விட்டு மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: