தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!

Wednesday, January 12th, 2022

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலையே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: