தற்போதுள்ள ஆபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Monday, April 12th, 2021

புத்தாண்டு காலத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போதுள்ள ஆபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஆடை மற்றும் பொருட்களை வாங்கும் போது மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம் மக்கள் பொதுப் போக்குவரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனிடையே புத்தாண்டுக்காக கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சிறப்பு போக்குவரத்து சேவைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபை மட்டும் 200 க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகளைச் பணியில் சேர்த்துள்ளதாகவும் சிறப்பு ரயில் சேவைகளும் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: