இலங்கைக்கு 141 வது இடம்!
Thursday, May 4th, 2017ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன், 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடக சுதந்திர தினம் நேற்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் ஶ்ரீலங்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்ப...
60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
இலங்கையில் அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!
|
|