அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். – மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
Friday, July 29th, 2022மக்களிடையே காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கொவிட், டெங்கு தொற்று அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் எனவும் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுவர்களுக்கு இடையில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும்,பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்புகள் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
சகல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே ஏப்ரல் 25 இல் தேர்தலை நடத்த முடியும் - தேர்தல்கள் ஆ...
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் 16 பேர் பலி - 98 பேர் காயம் – இலங்கையில் தொடர்கின்றத...
|
|