எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!
Thursday, January 7th, 2021எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள், இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பணியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர முடியும்.
விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தாக்கத்தால் 16.8 கோடி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை - ஐ.நா. தகவல்!
இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் இடையே உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இ...
தேர்தல் முறைமை திருத்தம் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அமைச்சர் பசில்மற்றும் ஹக்கீம் ஆகியோர் ...
|
|