தனியார் பேருந்துகளுக்கு தேவையானளவு டீசலை முழுமையாக வழங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு!

Wednesday, August 10th, 2022

பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்றுமுதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.

மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள் தொடர்ந்து தங்களது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என தனியார் பேருந்து ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வ...
தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பு - ஒமிக்ரான் பரவாது என்ற உத...
இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் திட்டங்களுக்கு மீண்டும் 1.6 பில்லியன் வழங்கும் - ரொய்ட்டர் செய்திச்சேவை தெர...