வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து – கலால் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023

எஞ்சிய வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனங்களுக்கு மதுபான உற்பத்தி மற்றும் அதனை விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

ஐந்து மதுபான உற்பத்தி நிலையங்களில் மது உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், மதுபான உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் உள்ளதால் சந்தையில் மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர...
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு - குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடி...
வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது!