அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தத் தடை!
Wednesday, August 1st, 2018அரசாங்க நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
முன்னாள் அமைச்சர் விஜயகோன் காலமானார்!
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !
கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு...
|
|