ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு – பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பு!

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது, மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், அதனை புதிதாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படிகள் தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் புனரமைக்கப்பட உள்ளது.
இங்குள்ள தொல்லியல் பெறுமதிமிக்க ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலையே உள்ளது என அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நேரடியாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் முறைப்பாடுகள்!
மாணவர்கள் ஒன்று கூடியதால் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் - பொலிஸார், இராணுவத்தினர் க...
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட...
|
|