ஜனாதிபதி உத்தரவு – பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை!
Sunday, July 18th, 2021
உடல்நலக்குறைவால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள், தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்பதாக வீடுகளிலிருந்து வெளியேற முடியாதோருக்கு விரைவில் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கடந்த 16 ஆம் திகதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்தே பொதுமக்களிடம் இந்த முக்கிய கோரிக்கையை இராணுவத்தளபதி முன்வைத்துள்ளார்.
வயோதிபர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, நடமாடும் சேவைகளூடாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் இடம்பெறுகிறது - பிரதமர் தெரிவிப்பு!
ஜூலை 6 முதல் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி - சுகாதார சேவைகள் ப...
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக இருக்காது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு...
|
|
|


