வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் இடம்பெறுகிறது – பிரதமர் தெரிவிப்பு!
Wednesday, October 26th, 2016யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் இருவர் கடந்த வியாழக்கிழமை (20) இரவு உயிரழந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டதற்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இடம்பெற்ற சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கவலையை வெளியிட்டதுடன், தகவலை கேள்வியுற்றதும் உடனடியாக செயற்பட்டதாகவும் தெரிவித்தள்ளார்.
Related posts:
மருத்துவ பீடத்திற்கு சைட்டம் மாணவர்கள் இணைக்கப்படின் கல்வித் தகைமை பரிசீலனை செய்யப்பட வேண்டும்!
மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி!
எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
|
|