சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி 25 சுற்றுலாப் பொலிஸ் நிலையங்கள்!

Friday, August 17th, 2018

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதியும் அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பொருட்டும் 25 புதிய சுற்றுலாப் பொலிஸ் நிலையங்கள் இலங்கையில் அமைக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த புதிய சுற்றுலாப்பொலிஸாருக்கு ஏனைய பொலிஸாரைப் போல் இல்லாமல் புதிய சீருடைகள் வழங்குவதுடன் சுற்றுலா தொடர்பில் முழுமையான அளிக்கப்படவுள்ளது.

இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் சபையில் தலைவர் கவன் ரத் நாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புதிய சுற்றுலா பொலிஸாருடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் இதனூடாக இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் இது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகையையும் அதிகரித்து நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என்றார்.

Related posts: