கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

தான் இன்னும் மொட்டு கட்சியிலேயே அங்கம் வகிப்பதாகவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு,

எமது கட்சி அவ்வாறானதொரு முடிவை இன்னும் எடுக்கவில்லை எனவும் கட்சி எடுக்கும் முடிவின் பிரகாரமே எனது தீர்மானம் அமையும்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். ரணிலை ஆதரிக்க  கட்சி முடிவெடுத்தால் அந்த முடிவை ஏற்பேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: