500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை – முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, November 5th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் இனம் காணப்பட்டதை அடுத்து இவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற கொரோனா வைரஸ் நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம், முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்தின் கீழ் இருக்கின்ற இராணுவ பயிற்சி முகாம், புதுக்குடியிருப்பு 68வது படைப்பிரிவின் திம்பிலி பகுதியில் இருக்கின்ற இராணுவ பயிற்சி முகாம் ஆகியவற்றில் இயங்கிய 3 தனிமைப்படுத்தல் மையங்களும் மூடப்படுகின்றது என்பதையும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளவர்களை தற்போது வீடுகளில் தனிமைப்படுத்துகின்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்த மூன்று தனிமைப்படுத்தல் மையங்களும் மூடப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: