ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் – இலங்கை அணிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு முறைப்பாடு!

Tuesday, September 19th, 2023

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றையதினம் (18.09.2023) இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததுடன், இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுடன் தோல்வியடைந்தமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியில் முறைகேடு நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை வேண்டும் – ஈ....
பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த்தன!
பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு - நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அ...