சிலாபம், தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் 2,467 கிலோ பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்!

Thursday, January 19th, 2023

சிலாபம், தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேக நபர்களுடன் 2,467 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று படகுகளை இலங்கை கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

, கடத்தப்பட்ட பீடி இலைகள் 76 தனித்தனி பொதிகளில் அதன் ஈரமான எடையுடன் தொடுவாவ பாலத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

கடலோர காவல்படையினர், புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பிடிபன மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் .

மேலதிக நடவடிக்கைகளுக்காக மாதம்பே பயிற்சித் திணைக்களத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related posts: