பிராந்திய விமான நிலையமாக மாறும் பலாலி விமானத் தளம்!!

Sunday, September 3rd, 2017

 

 

இந்தியாவுக்கான விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமானப்படைத் தளத்தை, பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

பலாலி விமான தளத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக இந்தியா சாத்திய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.பலாலி விமான தளத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக, இந்திய விமான நிலைய அதிகாரசபை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக மேலதிக காணி சுவீகரிப்புக்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், ஓடுபாதையை விரிவாக்காமல், பலாலி விமான தளத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

 

Related posts: