இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம்!

Thursday, July 6th, 2023

இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவருக்கும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே, இந்த இணக்கப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்க பெல்ஜியம் முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கு சாதகமான பதிலை இலங்கைக்கான பெல்ஜிய தூதுவர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: