சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!
Sunday, February 11th, 2024
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாமென்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருவது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
பங்கேற்கும் மதிப்பீட்டாளர்களுக்கு 1,450 ரூபா முதல் 2,000 ரூபா 2023 (2024) இல் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நியாயமான தீர்வு கிடைக்கும்; யாழ். பல்கலை மாணவர்கள் நம்பிக்கை!
தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும் – இராணுவத்த தளபதி சவேந்திர சில்வா!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!
|
|
|


