சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

Saturday, January 6th, 2024

சர்வமதத் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று சந்தித்தார்.
வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அவர்கள் வட மாவட்டங்களின் விஷேட அபிவிருத்தி குழுக் கூட்டங்களை நடத்தினார். 
அதைத்தொடர்ந்து புத்திஜீவிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துவருகின்றார்.  இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் சர்வமதத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
இதனிடையே
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாடுகளுக்கு அமைய வடக்கின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வரும் ஜனாதிபதி அவர்கள் காலையில் சர்வமதத் தலைவர்களை சந்தித்தார்.
அதனைத்தொடர்ந்து தற்போது யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடுகின்றார்.
000

Related posts: