நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் – இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை!
Sunday, September 18th, 2022நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு போகத்தில் எதிர்பார்த்ததை விடவும் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக இந்த ஆண்டு 6 இலட்சம் மெற்றிக் டன் அரிசி மாத்திரமே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா ...
எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவையை பாதிக்காது - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபைய...
|
|
|


