கொழும்பு – வவுனியா வரையான புகையிரதம் யாழ்ப்பாணம் வரை சேவையில்!
Thursday, April 11th, 2019கொழும்பு கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த புகையிரம் நாளை மறுதினம்(13) அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
90 அலகுகளுக்கு குறைந்த மின் பாவனையாளர்களுக்கு மின்குமிழ் இலவசம்!
இடைக்கால கணக்கறிக்கை பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - இன்றும் நாளையும் விவாதம்!
உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!
|
|