கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் – மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Monday, October 12th, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது எனவும் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரசுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர் –  “கொரோனா வைரஸ் ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது.

எனவே, கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது.

கொவிட் -19 நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம், அதே நேரத்தில் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டியதும் அவசியம்.

உயர்தர பரீட்சைகள் சுமார் 1 மாத காலத்துக்கு நடைபெறும். எனவே, அதற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் செயற்படுவதை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்புடன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: