யோசனைகள், திறன்கள் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற நடவடிக்கை -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு!

Saturday, January 21st, 2023

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து, ‘தேசிய இளைஞர் மேடை’ எனும் தொனிப்பொருளில், யோசனைகள், திறன்கள் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் வகையில் இளைஞர்கள் தலைமையிலான அபிவிருத்தித் திட்டத்தை நாட்டை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, அனைத்து பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதான நகரங்களை சுற்றுலா நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இதன்படி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்கள் யாழ் மாவட்டத்தை மையமாக வைத்து களனி பல்கலைக்கழகம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகம் அனுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை முன்வைத்தன.

ருஹுணு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டங்களுக்கான திட்டங்களையும், கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான திட்டங்களையும் சமர்ப்பித்தன.

பேராதனை, வயம்ப மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களை முன்வைத்ததுடன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான திட்டங்களை முன்வைத்தன.

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்த ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தனியார் துறையின் நிதி உதவியையும் நாட முடியும் என்றார்.

நாட்டின் அபிவிருத்திக்கு பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு போக்கு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த திட்டங்களில் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பை பாராட்டியதுடன் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி சம்பத் அமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் அதிகாரிகள். வரி நிறுவனங்கள் ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் இந்த கலந்துரையாடலில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள...
வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு - சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என இராஜாங்க அம...
வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு –நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெ...