கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Friday, November 19th, 2021அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தொற்றுக்கான அனைத்து விடயங்களையும் செய்துள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை நூற்றுக்கு 75 சதவீதற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சிய பகுதி பொதுமக்களின் கைகளில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் மக்கள் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன - பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை ...
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை - கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
|
|