கொரோனா தொற்று – இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன – பரீட்சைகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, July 16th, 2020

இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட பல பரீட்சைகளே இவ்வாறு பிற்போப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான முதல் துறை பரீட்சை , இலங்கை அதிபர்கள் சேவையின் 2ம் வகுப்பில் உள்ள அதிகாரிகளுக்கான திறன் பட்டித் பரீட்சை ,இலங்கையின் ஓரியண்டல் மொழிகளின்பரீட்சை , இலங்கையின் ஓரியண்டல் மொழி உதவி நிறுவன பரீட்சை – 2019 (2020) ஓரியண்டல் பண்டித மத்திய பரீட்சை, இலங்கையின் ஓரியண்டல் மொழிகள் கூட்டுறவு சங்கத்தின் பரீட்சை  ஓரியண்டல் அறிஞர்களின் இறுதித் பரீட்சை போன்ற பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: