கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவிப்பு!
Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்துறையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளுக்கான நோய்க்கு பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரான ஏனைய நோய் தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் நேரிடுவதை தடுக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று, சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்
Related posts:
சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளா...
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்திவைக்கப்படுகின்றதா நாடாளுமன்றம் - ஜனாதிபதி ரணில் ஆல...
|
|
|


