சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Thursday, May 24th, 2018தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் நாட்டு மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற்ற நிலையில் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தாலும் மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காரைநகர் கோவளம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது!
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா புதிய தீர்மானம்!
விசேட தினம் கிடையாது: ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம்!
|
|