கொரேனானா தொற்று – மேலும் 15 பேர் பலி!
 Monday, May 10th, 2021
        
                    Monday, May 10th, 2021
            
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று 2 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஆயிரத்த 365 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வகுப்புத் தடையை நீக்குங்கள்- பல்கலையில் ஆர்ப்பாட்டம்!
உடை மாற்றும் அறை இன்மையால் தாதிய அலுவலர்கள் சிரமம்!
இலங்கையில் மோசடியான நிறுவனம் நாடாளுமன்றம் - சபாநாயகர் வருத்தம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        