குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, March 27th, 2024தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தை 5,000 ரூபாவினால் அதிகரிப்பதற்காக தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான யோசனையை தொழில் அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் மாநகரை துய்மைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை - மாநகர சபை ஆணையாளர் !
கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!
அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறித்து நிற்கிறது தீபாவளி திருநாள்- வாழ்த்துச் செய்தி...
|
|