27ஆம் திகதி கொரிய மொழி பரீட்சை ஆரம்பம்!
Saturday, April 22nd, 2017
எதிர்வரும் 27ஆம் திகதி தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு கொரிய மொழி தேர்ச்சி தொடர்பான பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை நிலையம் குறித்த விபரங்கள் www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
27ம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை நான்கு மாதங்களுக்கு இல. 205, தெபானம, பன்னிபிட்டி என்ற முகவரியிலுள்ள கொரிய கணனி மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 22888 பேர் விண்ணப்பத்துள்ளனர். இவர்களிலிருந்து 16431 பேர் உற்பத்தித்துறை சம்பந்தமான பரீட்சைக்கும் 6457 பேர் கடற்றொழில் துறை பரீட்சைக்கும் தோற்றவுள்ளனர்
Related posts:
யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது – தோழர் ஜீவன்!
துருக்கி ஜனாதிபதி எர்டோகனை சந்தித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன !
யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில தகராறு - இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!
|
|