குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதன்போது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய இந்த கைது நடவடிக்கையில் தொழிலுக்குப் பயன்படுத்தி 11 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பு, கடற்கரையில் வைத்து மன்னார் மற்றும் கல்பிட்டி மீனவர் 29 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வேலணை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவிப்பொருட்கள் கையளிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடப்பட்டது!
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மின்சார சபைக்கு 10 ஏக்கர் நிலம் கொள்வனவு - அமைச்ச...
|
|