கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!

Tuesday, December 8th, 2020

புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடும் மழை மற்றும் புயல் காரணமாக குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைப் பயிர்ச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உரமானியக் கொடுப்பனவு தாமதத்தால் பயிருக்கு உரத்தை பயன்படுத்த முடியவில்லை – விவசாயிகள் கவலை!
மழைக்காலத்தில் வீட்டுத்திட்டங்கள் முடிக்காவிட்டால் நிதியை திருப்பி விடுவோம் - மிரட்டும் பிரதேச செயல...
திங்கள்முதல் மீண்டும் மின் துண்டிப்பு - இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்க...