காலி துறைமுக அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

Saturday, September 3rd, 2016

காலி துறைமுகத்தை அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

காலி துறைமுகமானது ஒல்லாந்தர் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க துறைமுகமாக உள்ளதுடன், சுற்றுலா பயணிகளையும் அதிகம் கவரும் துறைமுகமாகவும் உள்ளது. தற்போது இங்கு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்தார்.

Aru

Related posts: