உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யதவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதி!

Thursday, October 19th, 2023

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யதவர்கள் அவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதியளித்தார்.

நாடாளுமன்றில் இன்று இந்த உத்தரவாதத்தை பிரதமர் வழங்கினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்த அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர்கள் முதலில் பணியாற்றிய அரச அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் பிரதமர் கூறினார்.

இதேவேளை, தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள விரும்பும் அரச ஊழியர்களுக்கு அனுமதிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களையும் கொண்டு வர விரும்புவோர் அவ்வாறு வேட்புமனுக்களை மீள பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: