கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!
Thursday, November 30th, 2023கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்
கல்வித்துறையில் உள்ள அனைவரும் இதனை புரிந்து கொண்டு பொறுப்புடனும், கவனமாகவும் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
குறைந்த வயதிலேயே கல்வி மட்டத்தில் மாணவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது புதிய கல்வி சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகவுள்ளது இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்தவுடன் அவர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|