கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை – ஒரு இலட்சம் ரூபா அபராதம் – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி தீர்ப்பு!
Thursday, March 28th, 2024கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பால் உற்பத்தியை அதிகரிக்க பசு மாடுகள் கொள்வனவு!
உணவில் நச்சுத்தன்மை? - 300 பெண்கள் மயக்க முற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதி!
வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான பதிவு கட்டணம் குறைப்பு!
|
|