கனடா விபத்தில் வேலணையைச் சேர்ந்த வயோதிபப் பெண் பலி!

Wednesday, July 19th, 2017

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார்.ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளையை அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார். தனது சகோதரியின் பிரம்பை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளார்.அவர்கள் அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்ந்து வருவதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தினமும் அவர் அந்த பேருந்தின் ஊடாகவே பயணங்களை மேற்கொள்வதாகவும் நேற்றைய தினம் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: