தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, March 17th, 2021

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஸெனெக்கா என்ற கொரோனா தடுப்பூசி பாவனை இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குறித்த தடுப்பூசியை நாம் பெற்றுக்கொள்ளவில்லை.

இதனால் தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண இது பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேநேரம் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இலங்கைக்கு தருவிக்கப்படவில்லை. இதனால், தடுப்பூசியை பெற்றுக் கொள்வது பற்றி எவரும் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விளக்கமறியலிலிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் :...
11 ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்புகின்றது இலங்கை - அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்த...
நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித...