சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Wednesday, August 18th, 2021

அரச ஊடக நிறுவனங்கள் அரசின் அபிவிருத்தி தொடர்பான தகவலை வெற்றிகரமாக மக்கள் மக்கள் மயப்படுத்துவதற்காக சிறந்த அரச ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவது அவசியமென்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்

புதிய வெகுஜன ஊடக அமைச்ர் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தார்.

ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னேற்றங்கள் நெருக்கடிகள் ஏனைய பிரச்சினைகள் என்பன பற்றியும் அமைச்சர் இதன்போது கேட்டறிந்துகொண்டார்..

அத்துடன் சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

தனிப்பட்ட நபர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகங்களின் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து அடுத்த வாரம்முதல் முறையான எதிர்கால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்

பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்க முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் வழங்கிய பங்களிப்புகளையும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது நினைவுகூர்ந்தார்.

புதிய அலைவரிசைகளை ஆரம்பித்து அவர் ஆற்றிய சேவைகளை மேலும் விஸ்தரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்...
எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்த...